கொரோனா; பாகிஸ்தானுக்கு சீனா மருத்துவ உதவி

இஸ்லாமாபாத்: கொரோனாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக சீனா மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளதாக சீன சர்வதேச வானொலி தெரிவித்துள்ளது.


கொரோனாவால் பாகிஸ்தானில் 1526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு மருத்துவ சாதனங்களை அளிப்பதற்காக, மார்ச்-27ல், பாகிஸ்தான் எல்லையை திறக்குமாறு சீனா கேட்டுக்கொண்டது. அதன்படி ஒரு ட்ரக்கில் 5 வென்டிலேட்டர்கள், 2000 பாதுகாப்பு உபகரணங்கள், 20,000 முககவசங்கள், மற்றும் 24,000 நியூக்ளிக் அமில சோதனை பொருட்கள் உள்ளிட்டவற்றை, குன்ஜெராப் பாஸ் வழியாக அனுப்பி பாகிஸ்தானுக்கு வைக்கப்பட்டது.